ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் கொள்ளையை தடுத்து நிறுத்தியுள்ளோம் : பிரதமர் மோடி

ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் கொள்ளையை தடுத்து நிறுத்தியதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாகவுரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். gfx inஅப்போது பேசிய அவர், சாதாரண மக்களைப் போலவே தாம் வாழ்ந்து வருவதாகவும், தங்க ஸ்பூனுடன் தாம் பிறக்கவில்லை என்றும் கூறினார்.

தங்களது பேரக்குழந்தைகளுக்காக வாக்கு சேகரிக்கவில்லை என்று குறிப்பிட்ட மோடி, மக்களின் நலனுக்காகவும், அவர்களது கனவை நிறைவேற்றவுமே வாக்கு கேட்பதாக கூறினார். ராஜஸ்தானில் முதலமைச்சர் வசுந்தராராஜே தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களைப் பட்டியலிட்டு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

நாட்டில் 4 தலைமுறைகளாக ஆட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஏழை மக்கள் படும் துயரம் தெரியாது என்று மோடி சாடினார். தமது தாய் விறகு அடுப்பில் சமையல் செய்யும் போது பட்ட துயரத்தை கண்டதாலேயே உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை தாம் அறிமுகப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

4 தலைமுறைகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கடைசி 10 ஆண்டுகளில் மட்டும் 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கொள்ளையடித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 4 ஆண்டுகளில் இந்த கொள்ளையை தடுத்து நிறுத்தியிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *