ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்பு நிதிக்கான வட்டியை எஸ்.பி.ஐ. வங்கி சற்று உயர்த்தி அறிவித்துள்ளது.
ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்பு நிதியை எஸ்.பி.ஐ. வங்கிக் கணக்கில் ஒன்று முதல் 2 ஆண்டுகளுக்கான வைப்புத் தொகை வட்டி விகிதத்தை மட்டும் 0.05 சதவீதம் முதல் 0.10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதேபோல், எஸ்.பி.ஐ.,யின் இன்டர்நெட் பேங்கிக் பயனாளர்கள் நாளை மறுதினத்துக்குள் மொபைல் நம்பரை இணைக்காவிட்டால் அந்த சேவை துண்டிக்கப்படும் எனவும் எஸ்.பி.ஐ., அறிவித்துள்ளது.