சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய அமைச்சருடன் சந்திப்பு

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை டெல்லியில் சந்தித்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்விடுத்துள்ளார். டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

அப்போது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து இதே கோரிக்கையை விரைந்து நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *