குமரி, நாகை, தர்மபுரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், சேலத்தில் பெய்த மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
சேலத்தில் நேற்று கடுமையான வெயில் வாட்டிய நிலையில், இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், பழைய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி, வின்சென்ட், கோரிமேடு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்
தர்மபுரிமாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்றுமாலை கனமழை பெய்தது. சுமரர் ஒருமணி நேரம் மழை நீடித்தது. நல்லாம்பள்ளி, மதிகோண்பாளையம், அன்னசாகரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.இதனால் சாலைகளில் மழைநீருடன் கால்வாய் நீரும் கலந்து ஓடியது. இதில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் மற்றும் குடிநீருக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும் என பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்
குமரி, நாகை, தர்மபுரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், சேலத்தில் பெய்த மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
சேலத்தில் நேற்று கடுமையான வெயில் வாட்டிய நிலையில், இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், பழைய பேருந்து நிலையம், அஸ்தம்பட்டி, வின்சென்ட், கோரிமேடு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்
தர்மபுரிமாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்றுமாலை கனமழை பெய்தது. சுமரர் ஒருமணி நேரம் மழை நீடித்தது. நல்லாம்பள்ளி, மதிகோண்பாளையம், அன்னசாகரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.இதனால் சாலைகளில் மழைநீருடன் கால்வாய் நீரும் கலந்து ஓடியது. இதில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் மற்றும் குடிநீருக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும் என பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர்