SPK குழுமத்தில் நடந்த சோதனையில் 174 கோடி ரூபாய் பணம், 105 கிலோ தங்கம் சிக்கியது..

எஸ்பிகே குழுமத்தோடு தொடர்புடைய இடங்களில், கடந்த இரு நாட்களாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் காட்டப்படாத 174 கோடி ரூபாய் பணமும், 105 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் எஸ்பிகே குழும உரிமையாளர் செய்யாத்துரை மற்றும் அவரது மகன் நாகராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர் வசிக்கும் வீடுகள், எஸ்பிகே குழும அலுவலகங்களில், வருமானவரித்துறை அதிகாரிகள் இரு நாட்களாக சோதனை நடத்தினர்.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செய்யாத்துரையின் சொந்த ஊரான கீழமுடிமன்னார் கோட்டை, மதுரையில் உள்ள அவரது அலுவலகங்கள் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *