ஓடும் ரயிலில் ஏறவும் முடியாமல், இறங்கவும் முடியாமல் தவித்த பயணி

மும்பையில் ஓடும் ரயிலில் ஏறவும் முடியாமல், இறங்கவும் முடியாமல் தவித்த பயணியை, காவலர் ஒருவரும், மற்றொரு பயணியும் காப்பாற்றிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

மும்பை பன்வெல் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவர், ரயில் பெட்டியின் கதவு அடைக்கப்பட்டிருந்ததால், கீழே இறங்க முயற்சித்தார். ஆனால், ரயில் வேகமெடுத்ததால், அவர் கீழே இறங்க முடியாமல் தவித்தபடி தொங்கிக் கொண்டே சென்றார்.

அவரைப் பார்த்த காவலர் ஒருவர், லாவகமாக பயணியை இழுத்து காப்பாற்றினார். அவருக்கு மற்றொரு நபரும் ஓடிவந்து உதவியதால்,  பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *