தமிழ்நாட்டில் சுமார் 4 லட்சம் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.
வரைவு வாக்காளர் பட்டியல் சனிக்கிழமை வெளியிடப்பட உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அதிமுக, திமுக, தேமுதிக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 8 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில், வாக்குச்சாவடி அலுவலராக தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசியல் கட்சியினர் முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ஜனவரியில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்ததை விட, தற்போது, வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4 லட்சம் குறைந்திருப்பதாகத் தெரிவித்தார்.