வங்கதேச தலைநகர் டாக்காவில் 20-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரின் ஆண்கள் தனிநபர் காம்பவுண்ட் பிரிவில், இந்திய வீரர் அபிஷேக் வர்மா இறுதி போட்டிக்கு முன்னேறினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் கொரிய வீரர்கள் கிம் ஜாங்கோ, ஹாங் சங் ஹோ ஆகியோரின் சவாலை முறியடித்து அபிஷேக் வர்மா முதலிடம் பிடித்தார். காம்பவுண்ட் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜோதி சுரேகா – அபிஷேக் வர்மா ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
2017-12-01