பிரிட்டனில் இந்தியாவைச் சேர்ந்த சட்பீர் அரோரா என்பவர் தனது மனைவியுடன் இணைந்து டேக்சி ஓட்டி வருகிறார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதத்தில் களவுசெஸ்டர் என்னும் ரெயில் நிலையத்தில் 13 வயது பள்ளிச்சிறுமி இறக்கி விடபட்டுள்ளார். சிறுமி வீட்டிற்கு தெரியாமல் அங்கு வந்துள்ளாரா என்பது குறித்து சிறுமியிடம் விசாரிக்கப்பட்டு கவால்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், விசாரணை நடத்தினர். அதில், சிறுமியை சாம் ஹெவிங்ஸ் என்பவர் கடத்துவதற்கு திட்டம் தீட்டிய உண்மை தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் சிறுமியை மீட்டு பெற்றொரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், அரோராவின் செயலை பாராட்டி அவருக்கு சிறந்த பாதுகாவலர் என்ற சான்றிதழை வழங்க உள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
2017-12-01