உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மர்ம நபர்களால் பத்திரிகையாளர் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பிலாஹுர் பகுதியை சேர்ந்தவர் நவின் குப்தா என்பவர் இந்தி தினசரி பத்திரிகையில் பணியாற்றி வந்தார். அவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சூழ்ந்து தங்கள் கைகளில் இருந்த துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டனர். இதில் நவின் குப்தா குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற காவல்துரையினர் நவீன் குப்தா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பத்திரிகையாளர் சுட்டு கொல்லப்பட்டதை அறிந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், குப்தாவின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்ப்பட்ட விவாகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *