அமெரிக்காவில் உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு கலந்துக்கொண்டு 49 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்றுள்ளார். இதன்மூலம் உலக பளு தூக்கும் போட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும் இந்த வெற்றி குறித்து பேசிய மீராபாய் சானு, தமது பயிற்சியாளர் விஜய் ஷர்மாவின் வழிகாட்டுதல் இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை என்றும் தமது பலவீனங்களை சரிசெய்து, அடுத்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு முயற்சி செய்வதாகவும் கூறினார். இந்நிலையில், தங்கம் வென்ற மீராபாய்க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
2017-12-01