ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் திறக்க முயற்சி: தொல்.திருமாவளவன் கண்டனம்!

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு, கண்டனைத்தை தெரிவிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்கூறியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்வதற்காக தமிழர் அல்லாத ஒரு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த நிறுவனத்தின் விருப்பப்படி தமிழர் அல்லாத நீதிபதியை நியமித்து இருப்பதன் மூலம் நீதிமன்றமும், ஆட்சியாளர்களும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு எந்த அளவுக்கு துணை போகிறார்கள் என்பதை உணர முடிகிறது. இவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே தமிழக அரசு இதில் உடனடியாக தலையிட்டு, தமிழர் ஒருவரை இந்த குழுவுக்கு தலைவராக நியமிக்க மனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *