அகில இந்திய அளவில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வால் மரணமடைந்த அனிதாவின் நினைவு தினத்தையொட்டி, அவரது சொந்த ஊரில் இன்று மாலை நூலகம் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகம் மட்டுமின்றி அகில இந்திய அளவில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும் கொள்ளிடம் பாலம் உடைந்ததற்கு மணல் கொள்ளையே காரணம் என்றும், முக்கொம்பு மேலணைக்கு செலவு செய்த தொகை பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.