கேரளாவில் எலிக்காய்ச்சலால் 5 நாட்களில் 23 பேர் பலியானதாக தகவல்

கேரளாவில் எலி காய்ச்சலுக்கு 5 நாட்களில் 23 பேர் உயிரிழந்திருப்பதால், சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

கால்நடைகள், நாய், எலி போன்ற விலங்குகளின் சிறுநீர் மூலம் லெப்டோஸ்பைரா என்ற கிருமி தண்ணீரில் கலக்கிறது. இது குடிநீர், பால் மூலம் பரவி மனிதர்களை தாக்கும்போது எலிக்காய்ச்சல் ஏற்படுகிறது. திருவனந்தபுரம், திரிசூர், மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் பரவி வருகிறது.

இதில் கோழிக்கோட்டில் இருந்து மட்டும் 8 பேர் உள்பட 23 பேர் 5 நாட்களில் பலியாகி இருக்கின்றனர். கேரளாவில் கடந்த 8 மாதங்களில் எலி காய்ச்சல் 97 பேரின் உயிரைப் பறித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்காய்ச்சல், மஞ்சள் காமாலை அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *