வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களின் ஊதியம் பிடித்தம்; ஏழு நாட்கள் ஊதியம் பிடித்தம் செய்து அரசு அதிரடி நடவடிக்கை…

ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 1 புள்ளி 5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களின் ஊதியத்தை 2 புள்ளி 57 மடங்காக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அரசு தரப்பில் 2 புள்ளி 44 மடங்கு ஊதியம் ஆளிக்க சம்மதிக்கப்பட்டது. அரசின் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த அரசு போக்கு வரத்து கழகங்களின் 14 தொழிற்சங்கத்தினர் தங்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்றும் ஓய்வூதிய நிலுவை தொகைகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும் அதனை வலியுறுத்தி கடந்த 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஊதிய உயர்வு தொடர்பாக விசாரணை நடத்த உத்தர விட்டதின் பேரில் போக்குவரத்து தொழிலாளர்கள் 12ஆம் தேதி முதல் வேலைக்கு திரும்பினர். இந்நிலையில் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்த 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை 7 நாட்களுக்கான சம்பளத்தை அரசு பிடித்தம் செய்துள்ளது. இதனை அடுத்து சம்பள பிடித்தம் செய்யப்பட்டது தொடர்பாக போக்கு வரத்து தொழிற்சங்கத்தினர் இன்று சென்னையில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *