வேலைவாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நாடு முழுவதும் 20 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் தொடக்கமாக, மத்திய அமைச்சகங்களின் கீழ் உள்ள 244 பொதுத்துறை நிறுவனங்களிலும், ரயில்வேயில் மட்டும் உள்ள 2 லட்சம் காலிப் பணியிடங்களையும் நிரப்ப திட்டமிட்டுள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் காலிப் பணியிடங்கள் குறித்து அறிக்கை அளிக்குமாறு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் மத்திய அரசின் நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *