நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகள் தமிழக மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றிவிட்டது என அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரியலூர் மாணவி அனிதாவிற்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய திராவிட கழக தலைவர் கி.வீரமணி, மருத்துவ கவுன்சிலுக்கு நீட் தேர்வு நடத்துவதற்கு உரிமை உண்டா? என கேள்வி எழுப்பினார்.

ஜாதியை கடந்து தமிழர்கள் அனிதாவை ஏற்றுக் கொண்டுள்ளனர் என அவரது சகோதரர் மணிரத்தினம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *