கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்கு காவிரி நீர் வந்து சேர்ந்தது.
விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் காட்டுமன்னார்கோவிலின் வீராணம் ஏரி மூலம் 75 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேராகவும் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவைக்கும் இங்கிருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது.
கடும் வறட்சியால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வீராணம் ஏரி வறண்டு போய் காட்சியளித்தது. தற்போது கல்லணை மற்றும் முக்கொம்பில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டிருப்பதால், வடவாறு வழியாக விநாடிக்கு 1,450 கன என அடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் மூலம் இன்னும் பத்து நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்பதுடன், சென்னைக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் கிடைக்கும்.