கள்ளக்காதலை தட்டிக்கேட்டதற்காக கூலிப்படையோடு சேர்ந்த படுகொலை செய்ய திட்டமிட்ட நபர் கைது

ராமநாதபுரம் அருகே, கள்ளக்காதலை தட்டிக்கேட்டதற்காக கூலிப்படையினரை வரவழைத்து கொலை செய்ய திட்டமிட்ட நபரை கூலிப்படையினருடன் சேர்த்து கைது செய்து போலீசார் சிறையிலடைத்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை அடுத்த களத்தூர் பகுதியில் வொர்க்-ஷாப் வைத்து நடத்தி வரும் விக்னேஷ் என்பவர், அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவரது உறவுக்கார பெண் சாலினி என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த கண்டித்து, தகராறில் ஈடுபட்ட வேலுச்சாமியை  கூலிப்படை உதவியுடன் தீர்த்துக்கட்ட விக்னேஷ் முடிவெடுத்துள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் கொங்கராயர்குறிச்சி அன்பு பட்டுராஜன் மற்றும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி குட்டி என்கிற செல்வமணி ஆகியோருடன் சேர்ந்து, விக்னேஷ் காரில் வந்துள்ளார். இதுதொடர்பாக, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா அளித்த தகவலின் பேரில், தேவிபட்டினம் பகுதியில், வாகன தணிக்கையின்போது, மூன்று பேரையும், வாள், அரிவாள், பட்டைக்கத்தி ஆகியவற்றுடன் மடக்கிய போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *