விவசாயிகள் மற்றும் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் அரசின் பொருளாதார கொள்கை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் அரங்கில் தற்கொலை நிலங்களாகும் விளைநிலங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், கலந்து கொண்டு விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் இந்த கருத்தரங்கில் பேசிய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், விவசாயிகள் மற்றும் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் அரசின் பொருளாதார கொள்கை என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர் உனக்கு தேவையான உணவை நீயே உற்பத்தி செய்யும் வரை கலப்படம் நம்மை விட்டு போகாது என்று தெரிவித்தார். மேலும் நாமே உற்பத்தி செய்யும் போது தான் விவசாயம் பாதுகாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் விவசாய தொழிலாளர் விடுதலை இயக்கம் ஆகிய இயக்கங்கள் வாக்குக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அல்ல வாழ்க்கைகாக உருவாக்கப்பட்ட இயக்கம் என்று தெரிவித்தார்.