விராத் கோலியின் ஆக்ரோஷமே இந்திய அணியின் பலமாக அமைந்துள்ளது என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கார் தெரிவித்துள்ளார்.

மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், விராத் கோலி உலகின் சிறந்த வீரர் என கூறினார். 2008 ஆம் ஆண்டு ஆடுகளம் கண்ட கோலி ஆக்ரோஷமாக விளையாடினார், அந்த ஆக்ரோஷமே இந்தியாவை தற்போது சிறப்பாக வழிநடத்துகிறது என சச்சின் தெரிவித்தார். புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் ஆட்டத்தின் போக்கை தங்களுக்கு சாதகமாக மாற்றும் திறமை படைத்தவர்கள் என அவர் பாராட்டு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *