ஹார்வே மற்றம் இர்மா புயல்களால் டெக்சாஸ், புளோரிடா, பியூர்டோ ரிகோ தீவு கடுமையான பாதிப்பை சந்தித்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, பேரிடர் நிவாரண நிதியாக அமெரிக்கா 36 புள்ளி ஐந்து பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. இதற்கான மசோதா மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்நிலையில், டெக்சாஸ் மற்றும் புளோரிடா மாகாணங்களை சேர்ந்த உறுப்பினர்கள் கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தி வருகின்றனர். தங்களின் கோரிக்கை மசோதாவில் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தனர்.