விண்வெளியில் குறிப்பாக செவ்வாய்க்கிரகத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதிக நேரம் இருக்க புதிய அணுசக்தி அமைப்பை நாசா உருவாக்கியுள்ளது. இதன் மூலம் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கருவியின் மூலம் 10-க்கும் அதிகமான கிலோ வாட் மின்சாரத்தை உருவாக்க முடியும். இவற்றின் மூலம் உயிர் காக்கும் கருவிகளையும், செவ்வாயில் பயணிக்கும் வாகனங்களையும் மின்னேற்றம் செய்து கொள்ள முடியும். இதன் முழு சோதனை மார்ச் மாதம் நடைபெறும் என நாசா தெரிவித்துள்ளது.
2018-01-20