விண்வெளிக்கு எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான அணுமின் உற்பத்தி கலன் சோதனை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளியில் குறிப்பாக செவ்வாய்க்கிரகத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதிக நேரம் இருக்க புதிய அணுசக்தி அமைப்பை நாசா உருவாக்கியுள்ளது. இதன் மூலம் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கருவியின் மூலம் 10-க்கும் அதிகமான கிலோ வாட் மின்சாரத்தை உருவாக்க முடியும். இவற்றின் மூலம் உயிர் காக்கும் கருவிகளையும், செவ்வாயில் பயணிக்கும் வாகனங்களையும் மின்னேற்றம் செய்து கொள்ள முடியும். இதன் முழு சோதனை மார்ச் மாதம் நடைபெறும் என நாசா தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *