ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் மூன்றாவது சுற்றுக்கு இந்தியாவின் போபண்ணா ஜோடி, திவிஜ் சரண் ஜோடி முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் போட்டிகள் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதன், ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா – பிரான்ஸின் ரோஜர் வாசலின் ஜோடி, அர்ஜென்டினாவின் லியானார்டோ மேயர் – போர்சுகலின் சவுசா ஜோடியை எதிர் கொண்டது. இப்போட்டியில் போபண்ணா – ரோஜர் ஜோடி 6 க்கு 2, 7 க்கு 6 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் திவிஜ் சரண் – அமெரிக்காவின் ராஜிவ் ராம் ஜோடி, இத்தாலியின் பேபியோ பாக்னினி – ஸ்பெயினின் கிரானலர்ஸ் ஜோடியை 4க்கு 6, 7க்கு 6, 6 க்கு 2 என போராடி வென்று, மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *