தமிழகம் மற்றும் புதுவையில் 4 நாட்களுக்கு வரண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலையோ, காற்றழுத்த தாழ்வு பகுதியோ இல்லை. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தின் உள் பகுதிகளில் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு இருக்கும் என்றும், சென்னையில் பொதுவாக வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *