மிகுந்த மன வேதனையுடன் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் எம்ஜிஆரின் 101வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், மணல் குவாரிகளை மூட வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தெரிவித்தார். மிகுந்த மன வேதனையுடன் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்த அவர், கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.