வாகனம் ஓட்டும் போது அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு செல்லும்; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

வாகனம் ஓட்டும் போது அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக்ததில் செப்டம்பர் 1ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் வாகனங்களை ஓட்டும்போது அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அகில இந்திய சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற அரசின் உத்தரவு செல்லும் என்று தெரிவித்தனர். மேலும் அரசின் அறிவிப்பில் தலையிட முடியாது என்றும், பொதுநல நோக்கத்திலான உத்தரவில் நீதிமன்றம் தலையிட்டால் பொதுநலனுக்கு எதிராக மாறிவிடும் என்றும் கூறினர். பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படும்போது பொதுநல மனுவாக தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *