தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தில் ஏஜி டெக் இந்தியா என்ற பெயரில் நடைபெறும் மூன்று நாள் விவசாய தொழில்நுட்ப மாநாட்டை, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார். பின்னர் இம்மாநாட்டில் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி 2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்று ஒரு இலக்கு வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளின் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இம்மாநாட்டில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *