வடகிழக்கு பருவமழை வரும் 25ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இனி அடிக்கடி மழையை எதிர்பார்க்கலாம் என்றும், குறிப்பாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் திடீர் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக போளூரில் 10 சென்டிமீட்டரும் சிவகங்கையில் 8 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *