மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாம் லாதம், ராஸ் டெய்லரின் அபார ஆட்டத்தால் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலியின் சதத்தால், 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் சேர்த்தது.

பின்னர், 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி, 49 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், நியூசிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *