வடகிழக்கு அமெரிக்காவை தாக்கிய பாம் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் நியூ இங்கிலாந்து கடற்பகுதியில் பனிப்புயல் ஒன்று உருவானது. பாம் என்று பெயரிடப்பட்ட அந்த பனிப்புயல் வடகிழக்கு அமெரிக்காவை கடுமையாக தாக்கியுள்ளது. இந்தப் புயலால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடுமையான குளிரால் வடக்கு கரோலினா, டெக்ஸாஸ், மிசவு, மிச்சிகன் உள்ளிட்ட இடங்களில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே சாலைகளில் குவிந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *