இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 73.1 ஓவரில் 286 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் நான்கு விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 11 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 5 ரன்களுடனும், ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இன்று காலை இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்குகிறது.
2018-01-06