வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தில் அதன் இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மழை கடல் பகுதியிலேயே பெய்துவிட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தனது இணையதளத்தில் அறிவித்தது. இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாலச்சந்திரன், வானிலை என்பது மாறுதலுக்கு உட்பட்டது என்றும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு தற்போது மாறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *