இந்தூரில் நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற உள்ள தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் சுஷில் குமார் களம் இறங்க உள்ளார்.

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரரான சுஷில் குமார், ஒலிம்பிக் தொடரில் இரண்டு முறை பதக்கம் வென்று சாதனைப் படைத்தவர். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது இந்தூரில் 15ஆம் தேதி தொடங்க உள்ள தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் 74 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க உள்ளார். இவர் கடைசியாக 2014ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்றார். இந்நிலையில் 3 வருடங்களுக்கு பின்னர் தற்போது களம் இறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *