ஈரான் பஹ்ரைனில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் எரிவாயு கொண்டு செல்லும் குழாயயில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானில் ஐ.எஸ். தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பஹ்ரைனில் உள்ள எரிவாயு கொண்டு செல்லும் குழாய் மீது ஐ.எஸ்.தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் சேதமடைந்த எரிவாயு தீப்பிடித்து எரியத் தொடங்கியது. கடும் தீப்பிழம்புகளுடன் பற்றி எரியும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. வானைத் தொடும் அளவிற்கு கொளுந்துவிட்டு எரியும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சேதம் குறித்தோ, உயிரிழப்புகள் குறி‌த்தோ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *