வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வுபகுதி வலுப்பெற்று நகரக்கூடும் என்பதால், தெற்கு வங்கக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், நேற்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதேபகுதியில் நீடிப்பதாக தெரிவித்தார். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும், டிசம்பர் 6 வரையிலான காலகட்டத்தில் வடமேற்கு திசையில் தெற்குஆந்திரா-வடதமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் கூறினார். மீனவர்கள் தெற்கு வங்கக் கடலில் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *