வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தின் தென்கிழக்கே ஆயிரத்து 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், டிசம்பர் 8ம் தேதி ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என வானிலை மைய இயக்கநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், ஒக்கி புயல் முன்னெச்சரிக்கை தகவல், அரசுக்கு முறைப்படி தரப்பட்டது எனவும், பாலசந்திரன் விளக்கமளித்துள்ளார். தமிழக மீனவர்கள் அடுத்து 3 நாட்களுக்கு வங்க கடலில் ஆழ்கடல் பகுதிகளுக்கும், வட தமிழகம் தெற்கு ஆந்திர கடல் ஒட்டிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் கூறினார். தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும், சென்னையில் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *