பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கியது தொடர்பான சர்ச்சையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீது புதிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ரபேல் ஒப்பந்தம் ரகசியமாக வைக்கப்பட்டது ஏன் என்று மக்களவையில் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட குறைவான தொகைக்கு ரபேல் ஒப்பந்தத்தை மோடி அரசு நிறைவேற்றியதாக ஊடகங்களில் செய்திகள் கசிந்தன.
இது தொடர்பாக பதிலளிக்க மறுத்த ராகுல்காந்தி தமது டிவிட்டரை பார்க்கும்படி செய்தியாளர்களிடம் கூறினார். இதன்படி கடந்த புதன்கிழமை வெளியிட்ட டிவிட்டர் பதிவில், மோடியால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 4 பில்லியன் டாலர் ஒப்பந்தம் கிடைத்ததாக பதிவிட்டார். தற்போது இரண்டாவது டிவிட்டரில் அந்த தொகையை 20 பில்லியன் டாலராக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.