நாடு முழுவதும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று 12 மணி நேர வேலை நிறுத்தம்

மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து, நாடு முழுவதும் லட்சக் கணக்கான தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 12 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளை மாற்றி, புதிய மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மசோதாவால் மாநிலத்தின் உரிமை பறிக்கப்படும் என்றும், ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியாக மாறும் என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், இன்று 12 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 400 மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் காலை 6 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *