ராமேஸ்வரம் மீனவர்கள் 10 நாட்களுக்கு பிறகு கடலில் மீன் பிடிப்பு

ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் வேகம் குறைந்து காணப்படுவதால் ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. ஆழ்கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் கடந்த 10 நாட்களாக மீன்பிடிக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று தங்கச்சிமடம், பாம்பன் மண்டபம், ஏர்வாடி, கீழக்கரை, சோழியாக்குடி போன்ற ஊர்களை சேர்ந்த மீனவ சங்கத்தலைவர்கள் சென்னையில் உள்ள மீன்வளத்துறை அலுவலத்தில் உள்ள இயக்குநரை சந்தித்து மீன் பிடிக்க அனுமதி வழங்கும்படி கோரினர். இதையடுத்து இன்று டோக்கன் பெற்று மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *