காங்கிரஸ் காரிய கமிட்டியை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மாற்றியமைத்துள்ளார்.
இதில் சுஷில்குமார் ஷிண்டே, திக்விஜய் சிங், கமல்நாத் உள்ளிட்ட 6 பேர் நீக்கப்பட்டுள்ளனர். சோனியா, மன்மோகன்சிங், மோதிலால் வோரா, குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, ஏ.கே.அந்தோணி, அகமது பட்டேல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தொடர்ந்து காரியக் கமிட்டியில் நீடிக்கிறார்கள்.
உம்மன் சாண்டி, சித்தராமையா ஆகிய முன்னாள் முதலமைச்சர்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஷீலா தீக்சித், தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம், டாக்டர் செல்லக்குமார் உள்ளிட்டோர் காரியக் கமிட்டியின் நிரந்தர அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.