நொய்டா அருகே 6 மாடிக் கட்டடம் சரிந்து மற்றொரு கட்டடமும் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு

டெல்லி அடுத்த நொய்டா அருகே ஆறு மாடிக்கட்டடம் மற்றொரு கட்டடம் மீது இடிந்து விழுந்ததில் குறைந்தது 2 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

ஷாபேரி என்ற இடத்தில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டடம் ஒன்று திடீரென சரிந்து அருகில் இருந்த 4 மாடிக் கட்டடத்தின் மீது விழுந்ததில் இரண்டு கட்டடங்களும் சாய்ந்தன.

இதன் இடிபாடுகளில் 30க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *