ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த வைத்திருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 350கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சுந்தரமுடையான் என்னும் கிராமத்தில் உள்ள கடற்கரையில் கியூபிராஞ்ச் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கள்ளத்தோணி மூலம் சட்ட விரோதமாக ஓரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை சம்பவ இடத்தில் பறிமுதல் செய்தனர்.
கடத்தலில் ஈடுபட்ட 3 பேரைக் கைது செய்த போலீசார் மண்டபம் காவல்நிலையத்துக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.