கோட்டைப்பட்டிணத்தைச் சேர்ந்த ராஜா முகம்மது என்பவர் கார் ஒன்றில் குடும்பத்தினருடன் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தார். ராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டிணம் அருகே சென்று கொண்டிருந்த போது, அவர்களது கார் மற்றொரு காருடன் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ராஜா முகம்மது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயம் அடைந்த 3 வயது குழந்தை உட்பட 3 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2017-11-24