அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 4 நாள் பயணமாக தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கேவுடன் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்த விக்ரமசிங்கே, பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினர். அந்த குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மற்றும் ஆனந்த் ஷர்மா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *