தாய்மொழியில் கவனம் செலுத்தினால், கல்வியில் முன்னேற்றம் கண்டு வெற்றியடையலாம்; துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவுறுத்தல்…….

தாய்மொழியில் கவனம் செலுத்தினால், கல்வியில் முன்னேற்றம் கண்டு வெற்றியடையலாம் என்று, குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டார். பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு துணைக்குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு , பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் தாய்மொழியின் மீது அனைவரும் பற்றுடன் இருக்க வேண்டும் என்றும், தாய்மொழியில் கவனம் செலுத்தினால், நிச்சயம் கல்வியில் முன்னேற்றம் கண்டு வெற்றியடையலாம் என்றும் கூறினார். மேலும் கல்வி பயிலும் காலத்தில் மாணவர்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *