தென் ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில், 37 ஆண்டுகளாக, ராபர்ட் முகாபே, ஆட்சி புரிந்து வந்தார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஊழலை எதிர்த்து, பல மாதங்களாக, மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் துணை அதிபர் எம்மர்சன் மனங்காக்வாவை ராபர்ட் முகாபே பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து ஜிம்பாப்வேயில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. சிக்கல் அதிகமானதால் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக முகாபே அறிவித்தார். அடுத்த அதிபர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், எம்மர்சன் மனங்காக்வாவை ராணுவம் முன்னிறுத்தியது. இதனையடுத்து ஜிம்பாப்வே நாட்டின் அடுத்த அதிபராக எம்மர்சன், இன்று பதவியேற்க உள்ளார்.
2017-11-24