ராணுவத்தில் அரசியலை நுழைக்க முயற்சி நடந்து வருவதாகவும் அரசியலில் இருந்து ராணுவம் விலகி இருக்க வேண்டும்,” என்றும் , ராணுவத் தலைமை தளபதி ஜெனரல், பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ராணுவத் தலைமை தளபதி ஜெனரல், பிபின் ராவத உரையாற்றினார் அப்போது, :முந்தைய காலத்தில், ராணுவத்தில் பெண்கள் மற்றும் அரசியல் குறித்து பேசப்படாது. என்றும் தற்போது அது, படிப்படியாக மாறி வருவதாகவும் அது தொடர்பான விவாதங்கள் நடைபெறுவதாகவும் கூறினார். ராணுவம் எப்போதும் அரசியலில் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்றும் மிகவும் துடிப்பான ஜனநாயகத்தை கொண்டுள்ள நாம் ராணுவத்தில் அரசியல் சேராமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அண்மையில் ராணுவத்தில் அரசியல் கலக்கப் படுவதாகவும் . இது நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.என்றும் ராணுவ தளபதி பிபின்ராவத் உரையாற் றினார்