தாயை கொலை செய்து விட்டு தப்பியோடிய தஷ்வந்தை தனிப்படை காவல்துறையினர் மும்பையில் கைது செய்துள்ளனர்.
சென்னை அடுத்த மாங்காட்டில் 6 வயது சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து எரித்து கொடூரமாக கொலை செய்த தஷ்வந்த் என்பவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளி வந்தார். தமது வீட்டை குன்றத்தூருக்கு மாற்றிய அவர், அவரது பெற்றோருடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று தனது தாயார் சரளாவை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார். மேலும் வீட்டில் இருந்த 25 சவரன் நகைகளுடன் தப்பி சென்றார். . இதையடுத்து தனிப்படை அமைத்து தஷ்வந்தை தேடி வந்த நிலையில் மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை சுற்றி வளைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறார்.