இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி, 196 ரன்கள் குவித்தது.
197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 40 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி திருவனந்தபுரத்தில் வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ளது.
16. இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக, அந்த நிறுவனம் மீது பி.வி. சிந்து சாடியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் மூலம் சென்றுள்ளார். அப்போது, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கடைநிலை அதிகாரி அஜீதேஷின் தன்னிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாகவும், அறிவுரை